Life quotes in Tamil 2023 | தமிழ் லைப் Quotes

Here is the list of the 100 best life quotes in Tamil 2023 | தமிழ் லைப் Quotes| சிறந்த வாழ்க்கைக்கான தமிழ் சிந்தனைகள்.

  1. வாழ்க்கையில் மன்னிப்பதும் மன்னிப்பு கேட்பதும் எந்த வகையிலும் நம்மை சிறுமைப்படுத்த போவதில்லை. எஞ்சியிருப்பது இன்னும் எத்தனை வருடங்கள், மாதங்கள், நாட்கள் என்பது நமக்கே தெரியாது. மன்னிப்பு கேட்பவன் மனிதன் என்றால்…மன்னிப்பவன் மாமனிதன்…!!
  2. வருத்தத்தை ஒரு சிலரே புரிந்து கொள்கிறார்கள். சிலர் கதை கேட்கவே விரும்புகிறார்கள். பலர் அதையும் கேட்பதில்லை.
  3. சில நிகழ்வுகளை மறக்கவும்,பல தவறுகளை மன்னிக்கவும் கற்றுக்கொண்டால் போதும், நிம்மதி நிலைக்கும்…!
  4. வாழ்க்கை அடுத்த நொடியில் ஆயிரம் ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருக்கிறது. சிலவற்றை சந்தோஷங்களாக. சிலவற்றை சங்கடங்களாக.
  5. வாழ்க்கையில்…நீ எதை சோதிக்கிறாயோ அது உன் பலம். எது உன்னை சோதிக்கிறதோ அது உன் பலவீனம்…
  6. தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக் கொள்கிறோமோ…அவ்வளவுக்கு அவ்வளவு மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும்…
  7. உனக்கான இடத்தை தேடுவதல்ல வாழ்க்கை…உனக்கான உலகத்தை உருவாக்குவதே வாழ்க்கை…!
  8. விருப்பம் இருந்தால் ஆயிரம் வழிகள்…விருப்பம் இல்லாவிட்டால் ஆயிரம் காரணங்கள்…இவை தான் மனிதனின் எண்ணங்கள்…!
  9. கடலில் கல் எறிவதால் கடலுக்கு வலிப்பதில்லை. கல் தான் காணாமல் போகிறது..விமர்சனங்கள் கல்லாகவும் நாம் கடலாகவும் இருப்போம்…
  10. பிறருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் நம்பிக்கையை கொடுங்கள். ஆயுள் முழுவதும் அதுவே போதுமானதாக இருக்கும்.
  11. முதுகை காட்டி காலை பிடித்து வாழ்வதை விட, நெஞ்சை காட்டி தலைநிமிர்ந்து வாழ்வோம். பாரதி தந்த ஊக்கமடா தமிழ் தாய் ரத்தமடா.
  12. பழிவாங்குதல் வீரம் அல்ல, மன்னித்து அவரை ஏற்றுக்கொள்வதே வீரம்…
  13. தேவை இல்லாமல் பேசுவதை விட அமைதியாக இருந்து விடலாம். நம் மனது புரியாத யாருக்கும் நம் வார்த்தைகளும் புரியாது.
  14. பால் மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது, பாத்திரமும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் பால் கெட்டுப்போகாது. அதேபோல் தான், நாம் மட்டும் நல்லவராக இருந்தால் போதாது, நம் சேர்க்கையும் சரியாக இருக்க வேண்டும்.
  15. கஷ்டத்திலும் ஒருவர் சிரிக்கிறார் என்றால்…எல்லாம் கடந்து நிற்கிறார் என்று அர்த்தம்…!
  16. வாழ்க்கை எப்படி வேண்டுமெனாலும் மாறட்டும். எண்ணங்கள் அடுத்தவரை காயப்படுத்தாமல் இருக்கட்டும். அதுவும் இதுவும் எதுவும் கடந்து போகும். ஆனால் எதுவும் மறந்து போகாது…!
  17. தேவைக்காக பழகுபவர்கள் காரியம் முடிந்து விட்டால், நமக்கு காரியம் நடந்தால் கூட திரும்பி பார்க்க மாட்டார்கள்.
  18. ஞானிகள் ஆசான்களிடம் சரியாக கற்று தேர்ந்ந்தாலும். உன் வாழ்க்கையில் உன் அனுபவங்களே உன்னை ஒரு சிறந்த மனிதனாக மாற்றும் வல்லமை பெற்றது.
  19. நல்லவர்கள் அன்பையும், புன்னகையையும். கெட்டவர்கள் அனுபவங்களையும், பாடங்களையும். வாழ்க்கையின் பக்கங்களில் மறக்கா நினைவுகளாக பதிந்து செல்கிறார்கள்…!
  20. காணாமல் போனவர்களை தேடலாம் அதில் சிறிதும் தவறு இல்லை. கண்டும் காணாமல் போனவர்களை மட்டும் உன் வாழ்க்கையில் நீ தேடி விடாதே…!
  21. கேள்வி என்னவென்று தெரியாது. ஆனால் பதில் எழுத வேண்டும். இது தான் வாழ்க்கை.
  22. அனைவர்க்கும் இனிமையாக இருக்க அந்த இறைவனானாலும் கூட முடியாது. அனைவரிடமும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க முயற்சி செய்…
  23. வலிகளை மறக்க வழி கிடைத்தால். வலியை விட்டு அந்த வழியில் செல். உன் வாழ்கைக்கு புது வழி கிடைக்கும்.
  24. எந்த செயல் செய்தபோதிலும் திறமை என்ற ஒன்றை மட்டும் வளர்த்து கொள். உன்னிடம் பணம், பொருள் ஒன்றும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த திறமையின் மூலம் ஜெயித்து விடலாம். வாழ்க்கையை ஒரு கை பார்த்து விடலாம்.
  25. எல்லா பயணங்களும் நம்ம நினைச்ச இடத்துல போய் முடியுறது இல்ல..! வழி தவறிப் போற சில பாதைகள் தான் நமக்கு வாழ்கையையே கற்று கொடுக்கிறது…!
  26. வாழ்க்கை என்னும் நதியின் இருபுறமும் இருப்பது கரை என்னும் நம்பிக்கை…! அதில் பீறிட்டு ஓடுகிறது விதி என்னும் வேடிக்கை…!
  27. சோர்வடைந்து விடாதே..! வாழ்க்கை நீ எதிர்பார்க்காத நேரத்தில் தான் பல ஆச்சரியங்களை கொண்டு வரும்..!
  28. கொடுப்பது சிறிது என்று தயங்காதே. வாங்குபவர்க்கு அது பெரிது. எடுப்பது சிறிது என்று திருடாதே. இழப்பவர்க்கு அது பெரிது.
  29. பிறப்பு என்பது அழகான விபத்து. இறப்பு என்பது ஆபத்தான விபத்து. இரண்டுக்கும் இடையில் சில காலம் வாழ்க்கை. கவலை இனிமை தனிமை அனைத்தையும் சுமந்து.
  30. பல காயங்களுக்கு கண்ணீர் மருந்து. சில காயங்களுக்கு பிரிவு மருந்து. எல்லா காயங்களுக்கும் சிறந்த மருந்து அமைதி…
  31. திறமை என்பது இறைவனால் கொடுக்கப்பட்டது. அடக்கத்துடன் இருங்கள். புகழ் என்பது மனிதரால் கொடுக்கப்பட்டது. நன்றியுடன் இருங்கள். அகம்பாவம் என்பது நமக்கு நாமே கொடுத்துக் கொண்டது. எச்சரிக்கையாக இருங்கள்…!
  32. இதயமம் ஒரு ரகசிய சுரங்கம்! நம்மை நேசிப்பவர்களுக்காக நாம் வாழ வேண்டும்… நம்மை வெறுப்பவர்களுக்காக வாழ்ந்து காட்ட வேண்டும்…
  33. அடுத்தவர்களை பாராட்டும் போது அவர்களின் மனமும் குளிரும், நம் மனதிலுள்ள பொறாமை குணமும் அழியும்.
  34. வாழ்கையில் சில தருணத்தில் பார்க்கும்போது பிடிக்காத சில விஷயங்கள் பழகிய பின் பிடித்தது பழகியபோது பிடிக்காத சில விஷயங்கள் பிரியும்போது பிடித்தது. பிடிப்பது பிடிக்காமலும் பிடக்காதது பிடித்தும் போவது காலத்தின் கட்டாயம் வாழ்க்கையில் சாதாரணம்.
  35. சபதங்களும் சவால்களும் காற்றில் பறக்கும் வார்த்தைகளாக இருக்க கூடாது.
  36. எல்லா மனிதனும் கண்ணாடி போல் தான்…உணர்வுகள் உடையும் வரை ஒரு முகம்…உடைந்து விட்டால் பல முகம்…
  37. ஓலை குடிசையில் பிறந்தான் மகன். கோடீஸ்வரன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் தந்தை!
  38. நேற்று என்பது உடைந்த கண்ணாடி மாதிரி ஒட்ட வைக்க முடியாது. நாளை என்பது மதில் மேல் பூனை மாதிரி. எந்த பக்கமும் விழலாம். இன்று என்பது உன் கையில் இருக்கும் வீணை மாதிரி. உன் வசதிக்கு ஏற்ப வாசித்துக் கொள்ளலாம்.
  39. போராடி வாழ்வதற்கு வாழ்க்கை ஒன்றும் போர்க்களமல்ல அது, பூ வனம் ….ரசித்து வாழ்வோம்….
  40. கடிகாரம்…!காத்திருக்கும் போது மெதுவாக நகரும். தாமதமாகும் போது வேகமாக நகரும். சோகத்தில் நகராது. மகிழ்ச்சியில் போவது தெரியாது. “நேரம் மனதை பொறுத்தது”.
  41. அரசியலை போல் தான் வாழ்க்கையும் பல எதிர்பார்ப்புகளை கொடுத்து ஏமாற்றுவதில்…
  42. கெட்ட கனவா வருதுன்னு கவலைப்படாதிங்க. பலர் வாழ்க்கையில் தூக்கமே வரலைன்னு வாழ்ந்துட்டு இருக்காங்க…!
  43. மொத்த பிடிவாதத்தையும் உடைக்கும் வலிமை பிடித்தவரின் மௌனத்துக்கு உண்டு…
  44. வாழ்க்கையில் … கிடைப்பதை அனுபவியுங்கள். கிடைக்காததை ரசியுங்கள். இழந்ததை உணருங்கள். பிடித்ததை விரும்புங்கள். பேராசையை தவிருங்கள். பழைய நினைவுகளை நினைத்து மகிழுங்கள் … வாழ்க்கை இனிக்கும்!
  45. அழ நினைத்தால் ஆசைதீர அழுதுவிடு கண்ணீரின் முடிவில் சுமைகளும் கரையுமென்றால்…
  46. நான் இல்லாம போறப்பதான் என்னோட அருமை புரியும்னு சொல்ற வார்த்தைக்குளதான். ஏகப்பட்ட ஏமாற்றமும் பல எதிர்ப்பார்ப்புகளின் நிராகரிப்புகளும் இருக்கும் ….
  47. சகித்துக்கொண்டு வாழ்வதல்ல வாழ்க்கை, சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை…
  48. போக போக சரியாகிவிடும் என்று சமாதானம் சொல்லியே நம் மனம் ஒவ்வாத செயல்கள் நம்மீது திணிக்கப்படுகின்றன!!!
  49. அடிக்கடி கண்ணீர் விட்டால், உன் நியாயமான கண்ணீருக்கும் மதிப்பிருக்காது…
  50. அடுத்தவரை ஈர்ப்பதற்காகவும்!! அடுத்தவரின் எண்ணங்களுக்காகவுமே இங்கு பலரின் வாழ்க்கை நகருகிறது !!!
  51. கடந்து போன நாட்களில் உன் துன்பத்திற்கான காரணத்தை பட்டியலிடு. இனி கடக்கபோகும் நாட்களில் அவை மீண்டும் நிகழாமல் தடுக்கலாம்…
  52. யாரும்மற்ற நிலைமையில் உணர்வதற்கு பெயரல்ல தனிமை, அனைத்து உறவுகளுக்கும் மத்தியில் ஒருவரின் பிரிவால் ஏற்படும் உணர்விற்க்குப் பெயர்தான் தனிமை ….
  53. காத்திருக்கும் பொறுமை நமக்கிருந்தாலும் காலத்துக்கு இல்லை…
  54. கடந்து போன வாழ்க்கையை கடக்க முடியாமலும், வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வில் நிலை கொள்ளாமலும் அலைந்து கொண்டே இருக்கிறது மனித மனம்!
  55. மனமும் கண்ணாடியைபோல்தான். உடையும்வரை யாரையும் காயப்படுத்துவதில்லை…
  56. உன்னை செதுக்கி கொள்ள உளி தேவை இல்லை, பலரது அவமானங்களும் சிலரது துரோகங்களும் போதும்
  57. இளமையில் உன் சேமிப்பு மட்டுமே முதுமையில் உனக்கு கைகொடுக்கும். அடுத்தவர் கையை நம்பி வாழும் வாழ்க்கை நரகம்…
  58. இறக்க மனமும் இரும்பாகி போகிறது சிலர் சுயநலவாதியாகும் போது.
  59. நம்மை நாம் கேள்வி கேட்காதவரையில் நம் தவறுகளை நாம் உணரபோவதில்லை…
  60. உங்களை யாராவது நிராகரித்தால் கவலைப்படாதீர்கள். பெரும்பாலும் மக்கள் விளைவுயர்ந்தவற்றைத் தான் வாங்க இயலாமல் நிராகரிக்கிறார்கள்.
  61. குறைகள் இருப்பது இயல்பு அதை மதிக்கொண்டு ஜெயிப்பதுதான் மதிப்பு.
  62. அன்று உனக்காக சிரித்தவர்கள், இன்று உனக்காக அழுதால்.. நீ வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமானது.
  63. மனம் விசித்திரமானது கிடைத்ததை நினைத்து நிறைவடையாது கிடைக்காததை நினைத்து தவிக்கும்.
  64. நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்.
  65. இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே, கனவுகள் முளைப்பது இருளில் தான்.
  66. கடினமான காலங்கள் ஒருபோதும் நீடிக்காது ஆனால் கடினமான மனிதர்கள் அதைச் செய்வார்கள்.
  67. அம்பினால் பட்ட காயம் ஆறும். அன்பினால் பட்டகாயம் ஆறாது!
  68. ஒரு நாள் உங்களை நம்பாதவர்கள் உங்களை எப்படி சந்தித்தார்கள் என்று எல்லோரிடமும் சொல்வார்கள்.
  69. தலையெழுத்தை மாற்றும் திறமை யாருக்கும் இல்லை. எது நடக்குமோ அது நடந்தே ஆகும்…
  70. உண்மையைச் சொன்னால் எதையும் நினைவில் வைத்திருக்க வேண்டியதில்லை.
  71. யாருக்காகவும் காத்திருக்காதே. நீ காத்திருப்பதால் உன் ஆயுள் அதிகரிக்கபோவதில்லை.
  72. மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை எப்போதும் அழகாக தான் தெரியும்.
  73. இதயத்தில் குறையிருந்தால் சரிசெய்ய பல வைத்தியர்கள் உன் மனக்குறைக்கு நீ மட்டுமே வைத்தியர்!
  74. தொடங்குவதற்கான வழி பேசுவதை விட்டுவிட்டு செய்யத் தொடங்குவதாகும்.
  75. கோடி கற்களுக்கு மத்தியில் இருந்தாலும் வைரக்கல் மங்கி விடுவதில்லை…
  76. வாழ்க்கையில் அன்பை தருபவர்களை காட்டிலும் அனுபவத்தை தருபவர்கள் தான் அதிகம்.
  77. எண்ணங்கள் அழகானால் வாழ்க்கையும் அழகாகும்.
  78. முத்துக்கள் கடலோரத்தில் இல்லை. ஒன்றை விரும்பினால் நீங்கள் டைவ் செய்ய வேண்டியிருக்கும்.
  79. இருப்பவருக்கு எத்தனை விளக்கு ஏற்றலாம் என்ற குழப்பம் இல்லாதவர்களுக்கு ஒரு விளக்காவது ஏற்றமுடியுமா என்ற கவலை.
  80. சிக்கல்கள் பழங்கள்; அதைச் சுமக்க மிகவும் பலவீனமான கிளைகளில் வளர கடவுள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்.
  81. நம் பயம் எதிரிக்கு தைரியம். நம் அமைதி அவனுக்கு குழப்பம். குழப்பத்தில் இருப்பவன் எப்போதும் ஜெயித்ததில்லை!
  82. உங்களால் முடியும் முன் நீங்கள் வெற்றி பெற முடியும் என்று முதலில் நம்ப வேண்டும்.
  83. இழந்ததை மறந்து விடு. இருப்பதை இழக்காமல் இருக்க!
  84. நம்ம வாழ்க்கைல ஒரு நாள் எல்லாம் மாறும் ஆனா எதுவும் ஒரே நாளில் மாறிடாது புதிய பாதையை நோக்கி பயணிப்போம்!
  85. சில இழப்புக்கள் வலியை தருகின்றது. சில இழப்புக்கள் வலிமையை தருகின்றது.
  86. அவமானத்தின் வலி அழகிய வாழ்க்கைக்கான வழி.
  87. கஷ்டங்கள் பெரும்பாலும் சாதாரண மக்களை ஒரு அசாதாரண விதிக்கு தயார்படுத்துகின்றன.
  88. மனம் அழகானால் வாழ்க்கையும் பூவனமாகும்…
  89. இயல்பான நம்மை அறிவோம் வேஷங்களை களைவோம் சாதனையாளர்களாக மலர்வோம்!
  90. வெற்றி தோல்வி அறியாமலேயே முடிந்துவிடும் விளையாட்டு வாழ்க்கை.
  91. நமக்கு நாம்தான் துணை என்பதை ஒரு கட்டத்தில் உணர்த்தி விடுகிறது இந்த வாழ்க்கை.
  92. தோல்வி உன்னை வீழ்த்தும் போதெல்லாம் குழந்தையாகவே விழு! மீண்டும் மீண்டும் எழுந்து நடக்க…!
  93. வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் உங்களுக்கான நிமிடங்களை ரசிக்க மறக்காதீர்கள்.
  94. கவலைகள் எல்லாம் கனவைப்போல் கலைந்துப்போக வேண்டுமென்பதே அனைவரின் கனவு!
  95. நம் தேடல்களில்….பல தேவையற்றவையே!
  96. இவ்வுலகில் நம்மை அடுத்தவர்கள் உடன் ஒப்பிட வேண்டாம் நாம் விலை மதிக்க முடியாதவர்கள் என்ற எண்ணத்தோடு அடி எடுத்து வைத்தால் வாழ்க்கை சந்தோஷமாக கழியும்.
  97. காரணமில்லாமல் வரும் கோபங்கள் நம் வளர்ச்சியை தடுப்பதோடு மட்டும் இல்லாமல் நெஞ்சத்தில் வஞ்சகங்களையும் அதிகரிக்க செய்துவிடும்.
  98. வாழ்க்கை பயணம் என்பது சைக்கிள் ஓட்டுவது போன்றது. உங்கள் சமநிலையை நிலைநிறுத்த நீங்கள் எப்போதும் நகர வேண்டும்.
  99. நேர்மை தவறாமல் வாழ்பவர்களை விட…நேரத்திற்கு தகுந்தாற்போல் வாழ்பவர்களே நிம்மதியாய் வாழ்கிறார்கள்.
  100. உன் தேடல்களும் எதிர்பார்ப்புகளும் நியாயமானதாக இருந்தால் நிச்சயம் உன்னை வந்தடையும் வந்தடைந்திருக்கும்!
[table “8” not found /]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *